Advertisement
Advertisement
Eminol | Norway | Sweden | Denmark | Sikunews | Hindi | Tamil | Polsk
தமிழர் படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்
நாடு கடந்த அரசின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா 11001 மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழர் படுகொலை நினைவு வாரம் வருடம் தோறும் மே மாதம் 12ம் திகதி உலகெங்கும் ஆரம்பமாகி உள்ளன.
Publisert: 14.05.2011 18:56
Av நாகலிங்கம் பாலச்சந்திரன், உள்ளக அமைச்சர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு:

இந்த நினைவு வாரம் வருடம் தோறும் மே மாதத்தில் நடைபெறும். மேலும் மே மாதம் 18ம் திகதியை தமிழீழ தேசிய துக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும்,பல தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்ட விபரங்கள் சமீபத்தில் வெளி வந்த ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த ஐ.நா.சபையின் அறிக்கையின்படி சிறிலங்கா அரசின் திட்டமிட்ட வகையில் உணவு செல்வதற்கு தடை விதித்த காரணமாக ,பல தமிழ் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் மேலும் பல தமிழர்கள் சிறிலங்கா அரசின் மருந்துத்தடை காரணமாகவும்,இரத்தப்பெருக்கு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக படுகொலை செய்யப்பட்டும் ,கற்பழிக்கப்பட்டவர்களை நினைவு கூருவதற்காகவும்,மரியாதை செலுத்துவதற்காகவுமே இந்த நினைவு வாரம் அமைகின்றது.
 
புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலகெங்கும் தமது தொகுதிகளில் இந்த நினைவு வார நிகழ்வுகளை மேற்கொள்வார்கள்.
 
பல்வேறு சமய ஆலயங்களில் வழிபாடுகளும்,ஆராதனைகளும்,நினைவுக் கூட்டங்களும்,மலர் தூவி அஞ்சலியும், மெழுகுவர்த்தி ஒன்று கூடலும் நடைபெறும்.
 
மேலும் மே மாதம் 18 ந்திகதி நியூயோர்க்கிலும் ,nஐனிவாவிலும் உள்ள ஐக்கிய.நாடுகள் சபையின் முன்றலில்,
 
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினை, சிறிலங்கா அரசினை சர்வதேச குற்றநீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தும்படி கோரியும் பேரணி நடைபெறும்.
சிறிலங்காவின் தமிழ்இனப் படுகொலைக்காகவும்,போர்க்குற்றங்களுக்காகவும் ஒரு விசாரணைக் குழுவை அமைக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்படும்.
 
இந்த மேற்படி வேண்டுகோள்களை கோரி உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கையெழுத்து வேட்டை தொடர்ந்து நடைபெறுமென்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது
 
அரசியல் வெளி இல்லாத காரணத்திற்காகவும், மிகவும் மோசமான பயங்கர நிலைமை உள்ள காரணத்திற்காகவும் தமிழீழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் சுதந்திரமாகவும்,வெளிப்படையாகவும் படுகொலை செய்யப்பட்ட ,கற்பழிக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்காக நினைவு நாள் நிகழ்ச்சிகளையே நடத்த முடியாத அடிப்படை உரிமைகள் இன்றி,பயம் கொண்ட நிலையில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
ஆனால் புலம் பெயர் தமிழ் மக்கள் ஐனநாயக சுதந்திரத்தினை,மனித உரிமைகளுக்கு மரியாதை கொடுக்கின்ற நாடுகளில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இம்மக்கள் படுகொலை செய்யப்பட்டும்,கற்பழிக்கப்பட்டும்,மானபங்கப்படுத்தப்பட்ட பெண்களுக்காக பல நிகழ்வுகளையும்,நினைவுகூரும் நிகழ்ச்சிகளையும் நடாத்துகின்றார்கள்.
 
சர்வதேச குற்றவாளியான சிறிலங்கா அரசு தமது கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்ஈழ மக்களை மிரட்டி தமிழர் படுகொலை நினைவு வாரத்தை அனுஷ்டிக்காமல் தடுத்தாலும் புலம் பெயர் தமிழர்களின் நினைவுகூரும் நினைவுகளை கைகட்டி நின்று பார்த்துக் கொண்டு பொருமுவதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இல்லை.
E-postaddresse
Ditt navn
Kategorier Nyheter På Tamil Det skjer
Format Ren tekst HTML
Intervall Daglig Ukentlig Månedlig
Språk Norsk
Morsmål (valgfritt)

Skriv inn teksten fra bildet:
Share/Save/Bookmark



Kommenter denne artikkelen

Ditt navn:
Emne:
Kommentar: (kun tekst, HTML ikke tillatt)
 
Skriv inn teksten fra bildet:
 
På Tamil
28.12.2011 21:19
கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்த நார்வே தமிழ் திரைப்பட விழா மூன்றாவது முறையாக வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நார்வே நாட்டின் தலைநகர் ‘ஆஸ்லோ’ (Oslo) மற்றும் லோறன்ஸ்கூ (Lawrence Co) ‘ ஆகிய நகரங்களில் நடைபெற இருக்கிறது. 
Les mer
11.12.2011 08:34
சங்ககாலத் தமிழர்களின் வரலாற்றைப் பதிவு செய்துள்ள பாலை திரைப் படம், அதன் கதையோட்டத்தின் ஊடாக, தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையப் பகுதியையும் பதிவு செய்துள்ளது.
Les mer
09.05.2011 12:04
நோர்வே நாட்டில் இலங்கைத் தலைவர்களுக்கு எதிராக பாரிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, Aftenposten பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Les mer
09.05.2011 11:59
”ஐ.நா நிபுணர் குழு அறிக்கையும் அனைத்துலக சமூகத்தி;ன் பொறுப்புகளும்” –ஒஸ்லோவில் மே 19 இல் கருத்தரங்கு!
Les mer
25.03.2011 11:01
நல்ல  தரமான கதைகளை கொண்ட தமிழ்ப்படங்களை  உலகத் திரையரங்குகளில் திரையிடுவதற்கான  முன் முயற்ச்சி.
Les mer
27.02.2011 17:58
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தனது அத்தனை கவனத்தையும் புலம்பெயர் தமிழர்கள் மீது திருப்பியது. 
Les mer
11.02.2011 22:31
நிவாரண உதவிக்காக பேர்கன் இந்துக்கலாசார மன்றத்தினால் குரோனர் 25 000 வழங்கப்பட்டு எம்மக்களை சென்றடைந்துள்ளது.
Les mer
14.01.2011 10:59
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு உதவி புரிய அணிதிரள்வோம்.
Les mer
03.12.2010 17:43
ILC தமிழ் வானொலி, இப்போது புதுப்பொலிவுடன் இணையத்தளம் வாயிலாக உலகெங்கும் வலம் வருகின்றது.
Les mer
27.11.2010 11:27
தமிழ்நெட்டில் பலகணி , இங்கே பார்க்கவும்.
Les mer
26.11.2010 14:06
பாலுமகேந்திரா , காசி ஆனந்தன் ஆகியோர் மக்கள் தொலைகாட்சியில் ஆற்றிய உரை.
Les mer
21.11.2010 12:28
சர்வேதேசமேன்கினும் நல்ல நண்பர்களையும், எங்கள் எதிரிகளுக்கு  மத்தியிலுள்ள  நல்ல இதயங்களையும்  எங்கள் அன்பால், பண்பால், உண்மையால், நேர்மையால் எங்கள் பக்கத்திற்கு  நாங்கள் வென்றெடுக்க வேண்டும்.
Les mer